திருப்பரங்குன்றம் அருகே திமுக மக்கள் சபை கூட்டம்

திருப்பரங்குன்றம், டிச. 26:  திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெருங்குடி  ஊராட்சிக்கு உட்பட்ட பரம்புபட்டியில் திமுக சார்பில் ‘அதிமுகவை  நிராகரிப்போம்’ எனும் மக்கள் சபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். இதில் ஒன்றிய  கவுன்சிலர் முத்துமாரி, ஊராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து  கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள்  அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதியில்லை என புகார் தெரிவித்தனர். டாக்டர்  சரவணன் எம்.எல்.ஏ பேசுகையில், ‘திமுக ஆட்சி அமைந்ததும் பொதுமக்களுக்கு,  அடிப்படை வசதி செய்து தரப்படும்’ என்றார்.

Related Stories: