ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் நடந்த திமுக கிராம சபை கூட்டத்தில், தொகுப்பு வீடுகள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் சரமாரி புகார் கூறினர்.ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், வக்கில் சினிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.