அனுமதியின்றி மது விற்றவர்கள் கைது

சிவகாசி, டிச. 25: சிவகாசி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த முனீஸ்வரன்(29), சங்கர்(30), குமார்(47) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வேல்முருகன்(43), சரவணன்(34), பாலகிருஷ்ணன்(74) ஆகியோரை போலீசார் கைது, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: