தேனி, டிச. 25: தேனியில் மாவட்ட வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டு விழா நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் திருவரங்கநாதன், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு ஏற்படுத்த வேண்டும். தேனியில் மேம்பாலம் கட்டுவதாக அரசு அறிவித்து வருகிறது.