பொதுமக்களுக்கு அனுமதியில்லை வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை

ஜெயங்கொண்டம், டிச.23: ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டியில் பாமகவின் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’’ என்ற பிரசாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் மாவட்டம் முஷ்ணத்தில் தொடங்கினார். இதற்காக சென்னையிலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுதுள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும் வன்னியர் சங்க தலைவர் குருவின் வீட்டிற்கு சென்றார். அங்கு குருவின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் குருவின் தாயார் கல்யாணியிடம் நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு புறப்பட்டார்.

Related Stories: