திருப்பூர், டிச.23: திருப்பூரில் டாஸ்மாக் கடை மூடுவதற்கு எழுத்து பூர்வமாக உறுதி அளித்த பின்னரும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்து நேற்று சுப்பராயன் எம்.பி. கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் நேற்று மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வடக்கு வட்டம் நெருப்பெரிச்சல் கிராமம், வாவிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண்:3942) நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த அனைத்துப்பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் போராட்டம் நடத்தினர்.