அரவக்குறிச்சி . டிச. 22: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் மழையின் காரணமாக பூக்கள் உதிர்ந்து அறுவடை மிகவும் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்துள்ளது. ஒரு காய் ரூ.5க்கு விற்பனையாகிறது. அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், கேரளா, மற்றும் பெங்களூரு, பூனே, மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது.