கரூர், டிச. 22: கருர் மாவட்டம் புலியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்(20). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டுள்ளார். ஆண்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே கரூர் திருச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்தவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மாயனூர் காவல் நிலையத்தில் பதிந்துள்ள வழக்கில், விபத்தில் இறந்த சதீஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.