அருப்புக்கோட்டையில் மின்சேமிப்பு விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை, டிச. 21: மின்சாரத்தை சேமிக்க வலியுறுத்தி அருப்புக்கோட்டை கோட்ட மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பாக மின்வாரிய அதிகாரிகள் நகர் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், பயன்படுத்தும் முறைகள் குறித்தும், சிஎப்எல் பல்புகளுக்கு பதிலாக எல்இடி பல்புகளை உபயோகிக்க வேண்டும் என  துண்டுபிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்தனர். புதிய பஸ்நிலைய பகுதியில் கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், உதவி மின் பொறியாளர்கள் சேதுராம், பிரபாகரன்,மற்றும் மின்வாரிய அலுவலர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: