தாந்தோணிமலை அருகே பைக் மீது ஆட்டோ மோதி தூய்மை பணியாளர் பலி

கரூர், டிச.18: கரூர் தாந்தோணிமலை அருகே பைக்கில் சென்ற தூய்மை பணியாளர் ஆட்டோ மோதிய விபத்தில் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் டி.செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காவேரி (76). தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வேறொரு நபருடன் காவேரி பைக்கில் சென்றார். பைக், சுங்ககேட் அருகே சென்ற போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. இதில், பைக்கில் இருந்து தவறி விழுந்த காவேரி காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: