வாடிப்பட்டி, டிச.18: வாடிப்பட்டியில் காஸ் விலை உயர்வை கண்டித்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர் இந்தியாவில் கடந்த 30 நாட்களில் இரண்டு முறை வீடுகளுக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாடிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக கொட்டு மேளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது.