புளியங்குடி, டிச. 18: தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ளதாக அறக்கட்டளை நிறுவனரும், திமுக வர்த்தக அணி மாநில துணைத்தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘ நமது தென் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளயுள்ளனர். இதனிடையே உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்துள்ளன. இதனால் படித்த ஏழை மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதையடுத்து தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ்குமார் நினைவு அறக்கட்டளை சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி) நடைபெறுகிறது.