கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில் கொடிக்குறிச்சியில் நாளை இலவச வேலை வாய்ப்பு முகாம்

புளியங்குடி, டிச. 18: தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ்குமார்  நினைவு அறக்கட்டளை சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி  கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி)  நடைபெற உள்ளதாக அறக்கட்டளை நிறுவனரும், திமுக வர்த்தக அணி மாநில துணைத்தலைவருமான அய்யாத்துரை பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘ நமது தென் மாவட்ட மக்கள் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளயுள்ளனர். இதனிடையே உலகையே அச்சுறுத்தும் கொரோனா காலத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்துள்ளன. இதனால் படித்த ஏழை மாணவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதையடுத்து தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ்குமார்  நினைவு  அறக்கட்டளை சார்பில் கொடிக்குறிச்சி யுஎஸ்பி  கலை மற்றும் அறிவியல் பெண்கள்  கல்லூரியில் இலவச வேலை வாய்ப்பு முகாம் நாளை (19ம் தேதி)  நடைபெறுகிறது.

இதில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் பிஇ, பி.டெக் அனைத்து பிரிவுகள், எம்பிஏ, எம்சிஏ, அனைத்து வகை பட்டதாரிகள், பட்டயதாரர்கள், ஐடிஐ, கேட்டரிங் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் வேலை தேடி கலந்து கொள்ளலாம். குறிப்பாக 2018, 19, 20ம் ஆண்டுகளில் தேர்ச்சிபெற்ற அனைரும் பங்கேற்கலாம். இவ்வாறு பங்கேற்க வருவோர், தங்களது கல்விச்சான்றிதழ், நகல்கள் ஒரு செட், இரு போட்டோ, சுயவிவரம் உள்ளிட்டவற்றை கொண்டுவர வேண்டும். படித்த மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.ஏற்பாடுகளை டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை மற்றும் வெங்கடேஷ்குமார்  நினைவு அறக்கட்டளை செய்துள்ளன.

Related Stories: