வத்திராயிருப்பு, டிச. 17: வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரியில் மழை பெய்தால் மழைநீர், ஓடைகள் வழியாக பெருக்கெடுத்து வத்திராயிருப்பு- மகாராஜபுரம் இடையே கல்லணையாற்று பாலத்தின் அடியே ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லும்.ஆனால், இந்த வழியில் உள்ள ஆற்றில் முட்செடிகள் அதிக அளவு முளைத்துள்ளது. அதனை அப்புறப்படுத்துவதோடு கல்லணையாற்று பாலத்திலிருந்து தெற்கு பகுதியில் உள்ள கரைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது.