திருப்பரங்குன்றம், டிச.16: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் போலீசாரின் தடையை மீறி தீபம் ஏற்றிய இந்து அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் புரதான சின்னமான தீப தூண் உள்ளது. இந்த தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இடத்தில் தீபம் ஏற்ற காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மலை உச்சியில் உள்ள தடை செய்யப்பட்ட தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது.