ஆவடி: திருமுல்லைவாயல் வேணுகோபால் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் செல்சியா(26). முதுநிலை பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். திருமணம் ஆகாதவர். இந்நிலையில், நேற்று செல்சியா மெடிக்கலில் மருந்து மாத்திரைகளை வாங்கிவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரை திடீரென வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். புகாரின்பேரில்
திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.