ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.செந்தில்குமார் பிறந்தநாள் விழா

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் இளைய மகனும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் கோ.ப.செந்தில்குமார் பிறந்தநாள் விழா மேல்மருவத்தூரில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சித்தர் பீடம் வந்த கோ.ப.செந்தில்குமாரை, ஆதிபராசக்தி இளைஞர் அணி நிர்வாகிகள், செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர், சித்தர் பீடத்தில் நடந்த சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்தார். தொடர்ந்து, தந்தை பங்காரு அடிகளார், தாய் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரிடம் ஆசி பெற்றார்.

தொடர்ந்து, அவரது அண்ணனும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவருமான கோ.ப.அன்பழகன், மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வழக்கறிஞர் அகத்தியன், டாக்டர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர். பின்னர், ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்கு சென்ற கோ.ப.செந்தில்குமாருக்கு கல்லூரி முதல்வர் ராஜா, துணை முதல்வர் நாகராஜன், டீன் ராமசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கு, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, கலையரங்கில் தனது பிறந்தநாள் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.

அங்கிருந்து, ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற கோ.ப.செந்தில்குமாருக்கு கல்லூரி முதல்வர் தமிழ்வேந்தன், மேலாளர் பட்டு, நிர்வாக அலுவலர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கல்லூரி அரங்கில் பிறந்தநாள் கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர், கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் இளைஞரணி மற்றும் செவ்வாடை பக்தர்களுடன் பிறந்தநாள் கேக்கை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, இளைஞரணி நிர்வாகிகள், அவருக்கு ஆளுயர மலர் மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவித்தனர்.

இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள், ஆன்மிக இயக்க நிர்வாகிகள் அனைவரும் கோ.ப. செந்தில்குமாருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பரந்தாமன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீகாந்த், சிவப்பிரகாசம்,  தேவனூர் தட்சிணாமூர்த்தி, தயாளன், கண்ணையா, காளிதாஸ், மேல்மருவத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலை, செம்பூண்டி தர்மலிங்கம், பழனிவேல்ராஜன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், உளுந்தூர்பேட்டை ஏ.கே.சாமி, பாக்கம் சக்திவேல் உள்பட பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: