தாராபுரம்.டிச.15: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கல்வி. வேலைவாய்ப்பில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் பேரணி நடைபெற்றது.
வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோஷங்கள் முழங்க தாராபுரம் தென்தாரை பெரிய காளியம்மன் கோவில் திருமலையிலிருந்து பாமக மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர்.