வத்தலக்குண்டு, டிச. 15: வத்தலக்குண்டு அருகே காமாட்சிபுரத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய இளம்பெண்களுக்கான வாழ்வாதார தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா தலைமை வகிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவடிவேல் முருகன் முன்னிலை வகித்தார். அயயம்பாளையம் சக்தி அறக்கட்டளை செயலாளர் ஜெயா வரவேற்க, தலைவர் ஜோதி அறிமுக உரையாற்றினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி சிறப்புரையாற்றினார்.