டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் வி.சி.க ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 11: டெல்லியில் பேராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். இதில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளைப் பாதிக்கும் 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், என கோஷமிட்டனர்.இதில், மண்டல அமைப்புச் செயலாளர் வளவன் வாசுதேவன், திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ரவிசங்கர், வடக்கு மாவட்ட துணை செயலாளர் சத்யன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: