தேமுதிக ஒன்றியக் கவுன்சிலர் திருமணம் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு வாழ்த்தினார்

ஆண்டிபட்டி, டிச. 11: ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை பகுதி தேமுதிக ஒன்றியக் கவுன்சிலர் முருகன்-அபர்ணா திருமணம், ஆண்டிப்பட்டி விக்னேஷ்வரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். இந்த விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, தேனி மாவட்ட அவைத்தலைவர் சந்தன முத்தையா, பொருளாளர் மாயி, தொண்டரணி துணைச்செயலாளர் முருகன், விவசாய அணி துணைச்செயலாளர் வீரபத்திரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜேஷ்வரி வனராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பால்பாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: