கன்னியாகுமரி டிச. 11: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, செபமாலை திருப்பலி உள்ளிட்டவை நடந்தன. 9 ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி நடக்கிறது. காலை 6.15 மணிக்கு திருப்பலியும் 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30க்கு நோயாளுக்கான திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பிள்ளைத் தோப்பு பங்குத்தந்தை அமுதவளவன் தலைமை வகித்து அருளுரை ஆற்றுகிறார். மாலை 6.30க்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன்கென்சன் தலைமை வகிக்கிறார். நாகர்கோவில் பங்குத்தந்தை ஜாண்சன் அருளுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும் 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30க்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது.