திருச்சி, டிச.10: எதுமலையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை புதியதாக வழங்குவதாக கூறி 600 பேரிடம் தலா ரூ.100 வீதம் வசூல் செய்த மாத்தூரை சேர்ந்த வாலிபரை கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அடுத்த கரியமாணிக்கம் பகுதி, எதுமலை கிராமத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை புதியதாக வழங்குவதற்காக தன்னை நியமனம் செய்துள்ளதாக புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த கோபால் மகன் தினேஷ்(25) என்பவர் நபர் ஒருவருக்கு ரூ.100 வீதம் சுமார் 600 பேரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.