அகற்ற கோரிக்கை ஆபத்தான வளைவுகளை கொண்ட ஜெகதாபி தரகம்பட்டி சாலையில் விபத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு வாகனஓட்டிகள் வலியுறுத்தல்.

கரூர், டிச. 10: ஆபத்தான வளைவுகளை கொண்ட ஜெகதாபி தரகம்பட்டி சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து தரகம்பட்டி, தோகைமலை, சிந்தாமணிப்பட்டி போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. இந்த சாலையில் ஜெகதாபி பகுதியை தாண்டியதும் மைலம்பட்டி வரை ஆபத்தான வளைவுகள் மூன்று உள்ளன. ஆனால், இந்த சாலை பகுதிகளில் தேவையான அளவு தெரு விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. பகல் நேரங்களில் கூட வாகனங்களின் அதிக வேகம் காரணமாக விபத்துக்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே, விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆபத்தான வளைவு பாதையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: