சிவகங்கை, டிச.10:சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் வங்கி அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, இப்பணிக்கான முதல் நிலை தேர்வு டிச.31, ஜன.2, ஜன.4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இன்று முதல் நடத்தப்பட உள்ளது.