சின்னாளபட்டி, டிச. 10: ஆத்தூர் ஒன்றியத்தில் சிறுமலையில் ஆணைவிழுந்தான் ஓடை, வெள்ளியங்கிரி ஓடை, காந்திகிராமம் ஓடை, வெள்ளோடு ஓடை, அரமணை ஓடை, ரெட்டபுத்து ஓடை, ராமக்காள் ஓடை என 10க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. சிறுமலையில் பெய்யும் மழைநீர் இந்த ஓடைகள் மூலம் காந்திகிராமம், தொப்பம்பட்டி, செட்டியபட்டி, கலிக்கம்பட்டி, அம்பாத்துரை, முன்னிலைகோட்டை, ஆலமரத்துப்பட்டி, எம்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆகிய கிராமஊராட்சிகளில் உள்ள குளங்களுக்கு செல்லும்.பஞ்சம்பட்டி பிரிவு, வெள்ளோடு பகுதியில் நீர்வரத்து கால்வாய்களை அடைத்து தனியார் சிலர் தொழிற்சாலைகளை கட்டியுள்ளனர். இதனால் ஆலமரத்துப்பட்டி, என்.பஞ்சம்பட்டி, பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ரெங்கசமுத்திரம் கன்மாய் வறன்டு கிடக்கிறது.