பட்டுக்கோட்டை, டிச. 9: பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போதைய காலகட்டத்தில் வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக செல்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான ஆடைகள், மளிகை மற்றும் வீட்டு உபயோகத்துக்கான பொருட்களை அனுப்புவதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் தொழில் முனைவோர் பலர் தங்களுடைய உற்பத்தி பொருட்களின் மாதிரிகளை வெளிநாட்டில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்புவதற்கும், மின் வணிகம் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்புவதற்குமான தேவையும் அதிகரித்துள்ளது.