மதுரை, டிச.8: கொம்பாடி ஊராட்சியில் உள்ள இரண்டு பெரிய கண்மாய்கள் தூர்வாராததால், தண்ணீர் நிரப்ப முடியவில்லை. வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி ஊராட்சியை சேர்ந்த தலைவர் தங்கம் தலைமையில் விவசாயிகள் நேற்று மதுரை கலெக்டர் அன்பழகனிடம் புகார் மனு கொடுத்தனர். இம்மனுவில், ‘‘நிலையூரிலிருந்து விருதுநகர் மாவட்டம் கம்பிக்குடி வரை நிலையூர் கம்பிக்குடி நிலையூர் விரிவாக்க கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் தண்ணீர் மூலம் நெடுங்குளம், கொம்பாடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும். தற்போது கொம்பாடியில் உள்ள கீழக்கண்மாய் மற்றும் மேலக்கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை. இந்த கண்மாய்கள் மட்டும் இதுவரை தூர்வாரப்பட வில்லை. கண்மாய் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகிறோம். இதுதொடர்பாக தங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.