ஜெயங்கொண்டம், டிச.7: ஜெயங்கொண்டம் வேளாண்மை வட்டாரத்தில் தேவமங்கலம் கிராமத்தில் மாவட்ட அளவிலான உலக மண்வளநாள் விழா தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் சார்பாக நடத்தப்பட்டது. விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி தலைமை வகித்து மண்வளநாள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில், மண்வள பாதுக்காப்பு, இயற்கை உரமிடல்,பசுந்தாள் உரமிடல், நுண்ணூட்ட உரமிடல் மற்றும் சமச்சீரான அளவில் மண் ஆய்வின் அடிப்படையில் ரசாயன உரங்கள் இடுதல் குறித்து ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார்.