பாலக்காடு, டிச. 4 : பாலக்காட்டில் ஹாஷிஸ் ஆயிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளதால் போதைத்தடுப்புப்பிரிவு போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பாலக்காடு டவுன் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுதீஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் நேற்று ஈடுப்பட்டனர். அப்போது பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்டு அருகே போதையை ஏற்படுத்தும் ஹாஷிஸ் ஆயில் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.