கரூர், டிச. 4: கரூர் மாவட்டம் நெரூர் கோயம்பள்ளி பிரிவுச் சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து நெரூர், கோயம்பள்ளி போன்ற பகுதிகளுக்கு ஏராளமான வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இதில் நெரூர் சாலையில் குறிப்பிட்ட தூரம் சென்றதும் கோயம்பள்ளி, திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு சாலை பிரிகிறது. அதிகளவு வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது.