வேதாரண்யம், டிச.4: கத்தரிப்புலத்தில் கடந்த 2009ம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ, மாணவிகள் ஒரு ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்ததையொட்டி 11ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனர்.