உயிர்த்தியாகம் செய்த 4 வீரர்களுக்கும் ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் அனைத்து தரப்பு வீரர்களும் அஞ்சலி செலுத்தினர். தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், எங்கள் வீரர்களின் மரணத்திற்கு பழிவாங்குவோம். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த என்கவுன்டர் சம்பவத்தை தொடர்ந்து தோடா வனப்பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நேற்று நடந்தது. கண்காணிப்பு பணியில் ஹெலிகாப்டர், டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பதுங்கியிருந்த தீவிரவாதிகள், அடர்ந்த வனத்திற்குள் தொடர்ந்து பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
The post தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை ராணுவ கேப்டன் உட்பட 4 வீரர்கள் வீரமரணம்: காஷ்மீரில் 3 வாரத்தில் 3வது என்கவுன்டர் appeared first on Dinakaran.