போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பலர், தங்களது ஆசிரியர்களின் பெயர்களை எழுதி போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்டிருக்கும் கட்டுமான பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் இடித்து வருகிறது. மூன்று பேர் பலியான சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விதிமுறை மீறி செயல்பட்டு வந்த 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்திலும் மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விவாதங்கள் நடந்தது. இந்நிலையில் தங்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி, டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post 3 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம்; போராட்டத்துக்கு ஆசிரியர்களை அழைக்கும் மாணவர்கள்: டெல்லியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.