தனது பிள்ளைகளுடன் பள்ளிக்குச் செல்லும் ஜெகதீசனின் பிள்ளைகள் வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி லட்சுமி வந்து பார்த்தபோது, வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 3 குழந்தைகளுக்கு விஷ உணவு கொடுத்து தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.