டேட்டிங் ஆப்ஸ் மூலம் வரவழைத்து ஓட்டலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 நண்பர்கள்: வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி

குர்கிராம்: அரியானாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் பெண் ஒருவரை ஓட்டலுக்கு வரவழைத்து அவரை 2 நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் குர்கிராமை சேர்ந்த இளம்பெண் ஒருவர், டேட்டிங் ஆப்ஸ் மூலம் வாலிபர் ஒருவரிடம் தொடர்பு கொண்டார். அந்த நபர், செக்டார் 50 பகுதியில் உள்ள ஓட்டலில் இருவரும் சந்திக்கலாம் என்று கூறினார். அந்தப் பெண்ணும் அந்த ஓட்டலுக்கு வந்தார். இருவரும் ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபரின் நண்பரும் அங்கிருந்தார். மூவரும் ஓட்டல் அறையில் உணவு சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயக்கமுற்று சுயநினைவை இழந்தார். அதனை வாய்ப்பாக்க பயன்படுத்திய அந்த வாலிபரும், அவரது நண்பரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாகவும் பதிவு செய்தனர். சில மணி நேரங்களுக்கு பின்னர், அந்தப் பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியது. இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை உணர்ந்த அவர், அவர்கள் இருவரிடமும் கடுமையாக பேசினார். அதற்கு அவர்கள், தாங்கள் எடுத்து வைத்துள்ள வீடியோவை வைரலாக்குவதாக மிரட்டினர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அவர்களின் பிடியில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார். பின்னர், செக்டர் 50 காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். மேற்கண்ட இரு குற்றவாளிகள் மீதும் கூட்டு பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி பிரவீன் மாலிக் தெரிவித்தார்.

The post டேட்டிங் ஆப்ஸ் மூலம் வரவழைத்து ஓட்டலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 நண்பர்கள்: வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: