திருச்செங்கோடு, மார்ச் 20: நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், திருச்செங்கோடு நகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்மோர் மற்றும் ஜூஸ் வழங்கும் பணியை டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில், நாள்தோறும் பழச்சாறு, நீர்மோர் வழங்க எஸ்பி அருளரசு உத்தரவிட்டார்.