போச்சம்பள்ளி, மார்ச் 19:மத்தூர் அருகே அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை திருப்பி தராததால் பைனான்ஸ் அதிபரை சரமாரியாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். மத்தூர் அடுத்துள்ள மிண்டகிரி பகுதியை சேர்ந்த விவசாயி மாதப்பன்(60). இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(45). இவர்கள் இருவரும் தங்களது நிலப்பத்திரத்தை, பைனான்ஸ் அதிபரான கார்த்திகேயன்(40) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமானம் வைத்து, பணம் வாங்கியுள்ளனர். பின்னர் வாங்கிய பணத்தை, வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தி மாதக்கணக்கில் ஆகும் நிலையில், அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை கார்த்திகேயன் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.