புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 28ம் தேதி நடக்கிறது

புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம்தேதி நடக்கிறது. இது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறைகளை போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த தனியார்துறை நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ வரை கல்வி தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: