கிருஷ்ணகிரி, பிப்.21: சின்னஒரப்பம் கிராமத்தில் நடந்த எருது விடும் திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சின்னஒரப்பம் கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டிருந்தன. அவ்வாறு அழைத்து வரப்பட்ட எருதுகளை கிராமத்தின் நடுவில் இரண்டு பக்கமும் சவுக்கு கம்பத்தால் தடுப்பு அமைத்து, குறிப்பிட்ட தூரத்திற்கு ஓட விட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் கண்காணித்து குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் எருதுகளுக்கு முதல் பரிசாக ₹50 ஆயிரம் முதல் ₹2500 வரை மொத்தம்
37 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.