பள்ளி ஆண்டு விழா

திருவள்ளூர், ஜன. 29: திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில், விஷ்வக்சேனா கல்விக்குழுமம் சார்பில், சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் மற்றும்  பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்விக்குழுமம் சார்பில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கல்விக்குழும நிறுவனர் கே.வி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஷம்யுக்தா மூவேந்தன் முன்னிலை வகித்தனர். கல்விக்குழும இயக்குனர் நாச்சியப்பன் வரவேற்றார். விழாவில்,பள்ளி தலைவர் சி.பி.மூவேந்தன் மாணவர்களுக்கு பரிசு  வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  விழாவில், கல்லூரி முதல்வர்கள் லீலா, சித்ரா, பள்ளி முதல்வர்கள் நாகேஸ்வரி, பூர்ணிமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: