கோவை, டிச.5: சவுத் இந்தியா பின்வெஸ்ட் நிதி நிறுவனம், ₹100 கோடி வர்த்தக இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘சவுத் இந்தியா பின்வெஸ்ட் பிரைவேட் லிமிடெட்’ என்னும் நிதி நிறுவனத்துக்கு அன்னூர், திருப்பூர், வடவள்ளி, ஊட்டி, கூடலூர், குன்னூர், பெருந்துறை, மேட்டூர், நாமக்கல், பாலக்கோடு, அரூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. திருக்கோவிலூர், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மிக விரைவில் கிளைகள் திறக்கப்பட உள்ளன. இந்நிறுவனம், தற்போது ₹100 கோடி வர்த்தக இலக்கை எட்டியுள்ளது. இதற்கான விழா, கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நடராஜன், நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் இலக்கை எட்ட உதவிய வாடிக்கையாளர்களுக்கு நிறுவன தலைவர் நடராஜன் நன்றி தெரிவித்தார்.