தேன்கனிக்கோட்டை, நவ.5: அறிவியல் கண்காட்சியில், மாநில அளவில் முதலிடம் பிடித்து கெலமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஆஷா, சர்மிளா ஆகியோர் வழிகாட்டி ஆசிரியர் திம்மப்பா தலைமையில் கரூரில் மாநில அளவிலான 47வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இதில் அறிவியல், தொழில்நுட்பம் அழியாமல் நிலைத்து நிற்கும் விவசாய பயிர்முறைகள் என்ற தலைப்பில் வாழை மர விவசாயம் தலைப்பில் கண்காட்சியை அமைத்திருந்தனர்.