கிருஷ்ணகிரி,நவ.5: மாதேப்பட்டி கிராமமக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி ஒன்றியம் மாதேப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாதேப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில், 48 குடும்பத்தினர் வீடு கட்டி கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, மின் இணைப்பு கேட்டு போராடி வருகிறோம். ஆனால், 48 குடும்பத்தில் 3 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.