கிருஷ்ணகிரி.நவ.5: கிருஷ்ணகிரி பள்ளி ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2019-2020ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடல்நலம், மன வளத்தை மேம்படுத்தும் வகையில், அப்பள்ளிகளில் பணியாற்றும் 110 உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மன வளக்கலை மன்றத்துடன் இணைந்து 3 நாள் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.நேற்று நடந்த முதல் நாள் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து, பயிற்சியின் நோக்கம், பயன்கள் குறித்து விளக்கினார்.