கொள்ளிடம், டிச.5: கொள்ளிடம் அருகே 500 ஏக்கர் நிலங்களுக்கு சாலையே வடிகாலாக மாறிய அவல நிலை நீடிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பன்னங்குடி, ஆலாலசுந்தரம், நல்லவிநாயகபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 500 ஏக்கர் நிலங்களில் தேங்கும் தண்ணீர் சாலையின் குறுக்கே கடந்து சென்று வெளியேறுகிறது. மாதானம் கிராமத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் சாலையின் குறுக்கே ஆலாலசுந்தரம் என்ற இடத்தில், வயல்களில் தேங்கிய மழை நீர் எளிதில் வழிந்து வடியும் வகையில் சற்றுபள்ளமாக சிமெண்ட் கான்கீரீட் அமைக்கப்பட்டு அதன் வழியே வயலில் தேங்கும் அதிகபடியான நீர் சென்று வடிகிறது. எந்த அளவுக்கு தண்ணீர் வயல்களில் தேங்கினாலும் ஒரு சில தினங்களில் தண்ணீர் எளிதில் சென்று வடிந்து விடுகிறது.