பாவூர்சத்திரம், டிச. 4: பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பபுரம் பெரியம்மன் கோயில் வளாகத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த கடை மூலம் நாடாக்கண்ணுப்பட்டி, வெள்ளைபனையேறிபட்டி, ரகுமானியாபுரம், கணக்கநாடார்பட்டி, சீதாராமன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 1300 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். வாரத்தின் 4 நாட்கள் இந்த கடை திறந்திருக்கும். மீதி 2 நாட்கள் திரவியநகரில் உள்ள பகுதி நேர கடை திறந்திருக்கும். இந்நிலையில் மேலஅரியப்பபுரம் ரேஷன் கடையை பிரித்து ரகுமானியபுரத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.