சேலம், நவ. 14: நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் கிளைச்சிறைகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள கிளை சிறைகளான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தியில் உள்ள பாஸ்டல் சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது: சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச்சிறைகளான நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்தியில் உள்ள பார்ஸ்டல் பள்ளியில் காலியாகவுள்ள தலா ஒரு துப்புரவு பணியாளர் பணியிடம் நிரப்பப்படுகிறது. இனச்சுழற்சி முறையில் பொதுப்பிரிவில் முன்னுரிமையற்றவரில் இரண்டு பணியிடம், ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவரில் ஒரு பணியிடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் ஒரு பணியிடம் என்று நிரப்பப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.