ஓசூரில் பள்ளி மாணவர்களுக்கு காது திறன் பரிசோதனை

ஓசூர்,அக்.17:  ஓசூரில்,  உலக செவித்திறன் ஆலோசகர் தினத்தை முன்னிட்டு நேற்று ஓசூர்  பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்பீச் அண்ட் ஹீயரிங் கேர் கிளிக்கில் இலவச காது  திறன் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் செவித்திறன் ஆலோசகர்  கிருஷ்ணா, காது கேட்காத குழந்தைகளுக்கு இலவசமாக செவித்திறன் பரிசோதனை  செய்து, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினார். இதில் ஓசூர் அன்னை  அரவிந்தர் சிறப்பு பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் 60க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.  நிகழ்ச்சியில்  பள்ளி ஆசிரியர் லதா மணிகண்டன், செவித்திறன் குறைபாடு உள்ள  அனைவரும், இதுபோன்ற முகாம்களில் கலந்து கொண்டு, தங்களின் செவித்திறனை  பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும் என்றார். செவித்திறன் ஆலோசகர் கிருஷ்ணா  நன்றி கூறினார்.

Related Stories: