நாகை, செப்.17: திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழலுக்கு துணை போகும் நாகை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை கலெக்டர் அலுவலக சுற்றுசுவர் மற்றும் புதிய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் திருமருகல் ஒன்றியம் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. இதில் திருமருகல் அருகே சேஷமூலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2017-18ம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட நெல் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் ரூ.2.17கோடி ஊழல் நடந்துள்ளது.