வேதாரண்யம், செப்.15: வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி கிராமத்தை சோந்தவர் சோமு மகன் ரவி (48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் (45) உப்பள கூலித் தொழிலாளர்களான இருவரும் உறவினர்கள். முன்விரோதத்தால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ம்தேதி செந்தில் அவரது தாய் செல்வி மற்றும் உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு பைக்கில் கோடியக்காட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர். அங்கு வீட்டிருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார்.